• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை விருத்தி செய்யும் நிதி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் 165 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதி உதவியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் முதலீடு மற்றும் தொழிற்படு மூலதன கடன் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் 'சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி கடன் திட்ட கருத்திட்டமானது' நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று வங்கிகளினால் நிதியோட்டத்தினை அடிப்படையாக கொண்டு கடன் வழங்குவதைவிட பிணைகளை அடிப்படையாக கொண்டு கடன் வழங்குவதற்கு முன்னுரிமையளிப்பதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகளுக்கு மாற்று வழியாக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தை தாபிப்பதற்கு ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமது தொழில்முயற்சிகளுக்கு நிதியிடுவது மேலும் இடர்களை எதிர்நோக்கும் தொழில்முயற்சியாளர்களுக்கு 'சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை விருத்தி செய்யும் நிதி கருத்திட்டம்' என்னும் புதிய கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு, அதன் பொருட்டு 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதற்குரிய உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.