• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் என்னும் பெயரில் அழைக்கப்படும் சட்டமூலம்
- 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டத்தினை இரத்துச் செய்து, பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களை பதிவு செய்யும் அதிகாரசபையினை தாபிப்பதற்காக ஏற்பாடுகளை விதிப்பதனூடாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் அதற்கு இணைவாக பின்வரும் சட்டங்களைத் திருத்துவதற்கும் 2019‑05‑28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

* காலவிதிப்பு (திருத்த) சட்டமூலம்
* நம்பிக்கைப்பொறுப்பு பற்றுசீட்டுகள் (திருத்த) சட்டமூலம்
* ஈட்டு (திருத்த) சட்டமூலம்
* நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்த) சட்டமூலம்
* உள்நாட்டு நம்பிக்கைப்பொறுப்பு பற்றுசீட்டுகள் (திருத்த) சட்டமூலம்
* கம்பனிகள் (திருத்த) சட்டமூலம்
* ஆவணங்கள் பதிவு (திருத்த) சட்டமூலம்

அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலங்கள் தொடர்பில் மேலும் உரிய அதிகாரிகளுடன் ஆராயுமாறு 2021‑05‑03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உரிய சட்டமூலங்கள் சட்டவரைநரினால் இற்றைப்படுத்தப்பட்டு, அதற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.