• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றின் கீழ் நிருவகிக்கப்படும் பெருந்தோட்ட காணிகளின் வௌிப்புற எல்லை நிலஅளவைப் பணிகளை மேற்கொண்டு எல்லை வரைபடங்களைத் தயாரித்தல்
- பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றின் கீழ் நிருவகிக்கப்படும் பெருந்தோட்ட காணிகளின் வௌிப்புற எல்லை நிலஅளவைப் பணிகளை மேற்கொண்டு எல்லை வரைபடங்களைத் தயாரிக்கும் கருத்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இது வரையிலும் உரிய காணியின் அளவின் குறிப்பிடத்தக்களவு நில அளவை வேலை நிறைவடைந்துள்ளது. மேலும் அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ள எஞ்சியுள்ள காணியின் அளவினையும் உள்ளடங்கும் வகையில் இக் கருத்திட்டத்தினை 2027 ஆம் ஆண்டுவரை நீடிக்கும் பொருட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.