• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டு சிறுபோக பயிர் சேதத்திற்கான இழப்பீடு செலுத்துதல்
- நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக போதியளவு நீர் விநியோகத்தை வழங்க முடியாமை காரணமாக 2023 சிறுபோகத்தில் 58,770 ஏக்கருக்கான நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் காரணமாக 53,965 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அவ்வாறு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு செலுத்துவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு பரிசீலனை செய்யப்பட்டு, அரசு முகங்கொடுத்துள்ள நிதி நெருக்கடி நிலைமையிலும் தற்போது நடைமுறையிலுள்ள பயிர் காப்புறுதி யோசனை திட்டத்தின் கீழ் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு செலுத்துவதன் பொருட்டு தேவையான நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.