• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்திற்கு ஆலோசனை சபையொன்றை நியமித்தல்
- நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் பணிகளை மிக வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்கு தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் பின்னூட்டல் என்பன தேவைபடுகின்றமையினால் அதன் பொருட்டு ஆலோசனை சபையொன்றை நியமிக்குமாறு 2023‑06‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட பொது கணக்குகள் குழு கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் உரிய ஏனைய திணைக்களத் தலைவர்களையும் துறை சார்ந்த நிபுணர்களையும் கொண்ட உத்தேச ஆலோசனை சபையை நியமிக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.