2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மத்தியஸ்தம் செய்வதன் மூலம் ஏற்படுகின்ற சர்வதேச தீர்த்து வைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் மற்றும் தத்துவமுள்ளதாக்கும் சட்டமூலம் - ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தம் செய்வதன் மூலம் ஏற்படுகின்ற சர்வதேச தீர்த்து வைத்தல் உடன்படிக்கைகள் தொடர்பிலான சமவாயத்தை (மத்தியஸ்தம் தொடர்பிலான சிங்கப்பூர் சமவாயம்) உள்நாட்டில் அமுல்படுத்துவதற்கு ஏற்புடையதான சட்டங்களை ஆக்கும் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2022‑10‑25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |