• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகங்களாக தரமுயர்த்தி கல்வியியல் பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தல்
- இலங்கையில் முழு ஆசிரியர் சமூகத்தையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போதுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகங்களாக தரமுயர்த்துவதற்கு பின்பற்றவேண்டிய நிர்வாக மற்றும் சட்ட வழிமுறை தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு 2019-12-04 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் சிரேஷ்ட பேராசிரியர் குணபால நாணயக்கார அவர்களின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் குழுவின் சிபாரிசிகளின் பிரகாரம் தற்போதுள்ள 20 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 19 கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகங்களாக தரமுயர்த்துவதற்கும் இலங்கை கல்வியியற் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை தாபிப்பதற்குரியதான சட்ட ஏற்பாடுகளை ஆக்கும் பொருட்டும் புதிய சட்டமூலமொன்றை தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.