• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மகளிர் ஆணைக்குழுவை தாபித்தல் தொடர்பிலான சட்டமூலம்
- மகளிர் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் போன்ற விடயங்களுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் பாலின சமத்துவம் மற்றும் நடுநிலைமை தொடர்பான பிரச்சினைகளில் தலையிடுவதற்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கு அவசியமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேசிய மகளிர் ஆணைக்குழு எனும் பெயரில் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்குவதற்காக 2022‑09‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பொருட்டு அமைச்சரவையினால் கொள்கை ரீதியிலான உடன்பாட்டினை தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.