2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பிலான ஒப்பந்தத்தில் இணைந்துக்கொள்தல் - அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் சார்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு 2021 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் நியூயோர்க் நகரத்தில் நடாத்தப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தொடருக்கு இணையாக குறித்த ஒப்பந்தம் தொடர்பாக நடாத்தப்படவுள்ள நிகழ்வில் இலங்கையினால் அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |