2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் குவைத் இராச்சியத்திற்கும் இடையில் இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றை தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் குவைத் இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடல்களின் போது இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றைத் தாபிப்பது தொடர்பிலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய துறைகளில் நட்புரீதியலான தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் நியூயோர்க் நகரத்தில் நடாத்தப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுக் கூட்டத்தொடருக்கு இணையாக இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றை தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |