• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயங்கரவாத தடைச் சட்டமூலம்
- பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2022‑09‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, குறித்த சட்டமூலம் 2023‑03‑22 ஆம் திகதியன்று அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அக்கறையுள்ள பல தரப்பினர்களினால் (உள்நாடு மற்றும் சர்வதேச) இந்த சட்டமூலத்திலுள்ள சில பிரிவுகள் சம்பந்தமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் அக்கறையுள்ள தரப்பினர்களிடமிருந்து முறையாக கருத்துக்கள் மற்றும் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதோடு, சில தரப்பினர்களுடன் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார். அதன்படி முன்வைக்கபட்டுள்ள சகல கருத்துக்களையும் பிரேரிப்புகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைத்து புதிய சட்டமூலமொன்றை சட்டவரைநரின் ஊடாக தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.