• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்தல்
- மின்சார முச்சக்கர வண்டிகளின் உற்பத்தியின் போதும் பெற்றோல் அல்லது டீசல் பயன்படுத்தி இயக்கப்படும் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்க வைப்பதற்கு இயலுமாகும் வகையில் மாற்றும் போதும் அதன் பொருட்டு மின் செறிவூட்டப்படும் பெற்றரிகள் பயன்படுத்தப்படுகின்றமையினால் அத்தகைய முச்சக்கர வண்டியின் நிகர எடை 500 கிலோ கிராம்களை விஞ்சுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்றும் மோட்டார் வாகன சட்டத்தில் பொருள் கோரப்பட்டுள்ளவாறு மோட்டார் முச்சக்கர வண்டியொன்றின் நிகர எடை 500 கிலோ கிராமையும் தேறிய எடை 1000 கிலோ கிராமையும் விஞ்சுதலாகாது. இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான தடைகளை நீக்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதற்கு 2022‑08‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.