• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிருலப்பனை, டி.எம்.கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன சமூக நலன்புரி மன்றத்திற்கு வழங்குதல்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் நடாத்தப்படும் தேசிய மற்றும் மத விழாக்கள் அடங்கலாக ஏனைய தேவைகள் சார்பில் தூர பிரதேசங்களிலிருந்து வருகைத்தரும் தேரோக்களுக்கு தங்குவதற்கான வசதிகளை வழங்கும் பொருட்டு உத்தியோகபூர்வ ஆசிரமமொன்றை நிர்மாணிப்பதற்கு ஏற்ற காணித் துண்டொன்றை வழங்குமாறு கண்டி அஸ்கிரிய மகா விகாரையின் மகாநாயக்க தேரோ அவர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு கிருலப்பனை, டி.எம்.கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 27 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டு இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்தக் காணித் துண்டை பிக்குமார் ஆசிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன சமூக நலன்புரி மன்றத்திற்கு இறையிலி கொடை பத்திரமொன்றின் மூலம் கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.