• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜாவெலவில் அமைந்துள்ள சில காணித் துண்டுகளின் உரிமையை இலங்கை மின்சார சபைக்கு நிலக்கீழ் குழாய் முறைமையினைப் பதிப்பதற்காக குத்தகைக்களித்தல்
- இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜாவெலவில் அமைந்துள்ள 69 ஏக்கர் காணியை 1997 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்ததன் மூலம் கையளிக்கப்பட்டுள்ளதோடு அதில் ஒரு பகுதியில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணியின் எஞ்சிய பகுதியில் தற்போது சொபதனவி புதிய மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இந்த எரிபொருள் மின் நிலையம் சார்பில் நிலக்கீழ் குளிரூட்டும் குழாய் வழி மற்றும் நிலக்கீழ் எரிபொருள் குழாய் வழி என்பவற்றை நிர்மாணிக்கும் தேவைகள் இனங்காணப்பட்டுள்ளன. இதன் பொருட்டு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜாவெலவில் அமைந்துள்ள மேலும் சில காணித் துண்டுகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, குறித்த காணித் துண்டுகளின் உரிமையினை துணை குத்தகை வழங்கும் உரிமையுடன் இலங்கை மின்சார சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.