• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரண்டு (02) நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட கண்டி இராச்சிய காலத்திற்குரிய ஆறு (06) தொல்பொருட்களை மீண்டும் பொறுப்பேற்றல்
- இரண்டு (02) நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட கண்டி இராச்சிய காலத்திற்குரிய ஆறு (06) தொல்பொருட்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேவையான இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கு 2023‑06‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க மேற்கொள்ளப்பட்ட கலந்துரை யாடல்களின் பின்னர் நெதர்லாந்து அரசாங்கத்தினால் குறித்த ஆறு (06) தொல்பொருட்களையும் மீண்டும் இலங்கைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு அரச வர்த்தமானி மூலம் வௌியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்த தொல்பொருட்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கு இருதரப்புக்கும் இடையில் உடன்பாட்டினைத் தெரிவிக்கும் சட்ட ஆவணத்திலும் குறித்த தொல்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டுவரும் வரை நெதர்லாந்தின் Rijks நூதனசாலையில் வைப்பதற்குமான உடன்படிக்கையிலும் கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.