• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்போது நடைமுறையிலுள்ள விசா செயல்முறையினை இலகுபடுத்துதல்
- 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன் கீழ் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வருகை விசா, வதிவிட விசா மற்றும் ஒருவழி விசா என மூன்று விசா வகைகளை வழங்குகின்றது. வருகை விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு விசா வகைகளின் கீழ வழங்கப்படும் விசா வகுதிகளில் நிலவும் உட்சிக்கல் நிலைமையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அதிக வௌிநாட்டவர்களை கவர்ந்திழுக்கும் நாடுகள் நடைமுறைப்படுத்தும் விசா வழிமுறைகளை பரிசீலனை செய்து இந்நாட்டில் நடைமுறையிலுள்ள விசா வழிமுறையினை மீளாய்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க நடைமுறையிலுள்ள விசா வழிமுறைகளை இலகுபடுத்தும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.