2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுங்க கட்டளைச் சட்டத்தின் 107அ ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகளை சமர்ப்பித்தல் - புலம்பெயர் பணியாளர்களுக்கு சட்டபூர்வமான வழிகளின் ஊடாக இந்நாட்டிற்கு அனுப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவதற்காக அமைச்சரவையினால் 2022‑08‑01 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஊக்குவிப்புகளை அமுல்படுத்தும் பொருட்டு சுங்க கட்டளைச் சட்டத்தின் 107அ ஆம் பிரிவின் கீழ் “2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பயணிகளின் பொதிகள் (விலக்களிப்பு - உள்வரும்) ஒழுங்குவிதிகள்" நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் அரசாங்க வர்த்தமானியின் மூலம் வௌியிடப் பட்டுள்ளது. சுங்க கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |