• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2024 சனவரி மாதத்திலிருந்து தடையற்ற திரவ பெற்றோலிய வாயு விநியோகத்தை உறுதிசெய்தல் - Litro Gas Lanka Ltd
- Litro Gas Lanka Ltd கம்பனிக்கு 280,000 மெற்றிக்தொன் திரவ பெற்றோலிய வாயு பெற்றுக் கொள்வதற்கான தவணை ஒப்பந்தமானது 2023‑12‑31 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதோடு, 2024-2025 காலப்பகுதியின் சார்பில் திரவ பெற்றோலிய வாயு வழங்குவதற்கு ஏற்கனவே கேள்வி கோரப்பட்டுள்ளது. ஆயினும், Litro Gas Lanka Ltd கம்பனியின் மீள் கட்டமைப்பு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் புதிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்வது குறித்த மீள் கட்டமைப்புச் செயற்பாட்டிற்கு பாதகமான தாக்கத்தினை செலுத்துவதற்கு இடமுள்ளதென தெரியவந்துள்ளது. ஆதலால், 2023‑12‑31 ஆம் திகதியன்றின் பின்னர் மீள் கட்டமைப்பு செயற்பாடு பூர்த்தியாகும் வரை தடையற்ற திரவ பெற்றோலிய வாயு பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரசாங்க பெறுகை வழிகாட்டல்களிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மீள் கட்டளையாக நடைமுறையிலுள்ள தவணை ஒப்பந்தத்தின் மொத்த வழங்கலின் 50 சதவீதத்தை தற்போதைய வழங்குநரிடமிருந்து கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.