• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்து சமுத்திர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்திற்கு இலங்கை அனுசரணை வழங்குதல்
- இந்து சமுத்திர நாடுகள் அமைப்பு 1995 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, தற்போது 23 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் 25 ஆவது சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழு கூட்டம் 2023‑10‑09 மற்றும் 2023‑10‑10 ஆகிய திகதிகளிலும் 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டம் 2023‑10‑11 ஆம் திகதியிலும் கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் சார்பில் இந்து சமுத்திர நாடுகள் அமைப்பின் தலைமை இலங்கையினால் பொறுப்பேற்கப்படவுள்ளதெனவும் இந்த காலப்பகுதியில் 'பிராந்திய கட்டமைப்பைப் பலப்படுத்துதல்: இந்து சமுத்திர அடையாளத்தை பலப்படுத்துதல்' என்னும் தொனிப்பொருள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல்கள் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.