• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபைக்கும் யப்பான் மின்சக்தி தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழிநுட்ப ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக் கையினை கைச்சாத்திடுதல்
- இலங்கை மின்சார சபை யப்பான் மின்சக்தி தகவல் நிலையத்துடன் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒத்துழைப்புடன் செயலாற்றி வருகின்றதோடு, 2019 ஆம் ஆண்டிலே தொழிநுட்ப ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றையும் செயற்படுத்தியுள்ளது. இவ்வாறு செயலாற்றியதன் மூலம் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பின் மீது பல்வேறுபட்ட அறிவுசார் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் 2023 ஆம் ஆண்டிலிருந்து தொழிநுட்ப ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்கு இருதரப்பும் உடன்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான உத்தேச தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கை சட்டமா அதிபரினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதும் அவதானிப்புரைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.