2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கதிர்காமம் புண்ணிய பூமி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க ஓய்வு மண்டப கட்டடங்களை கிரிவெஹெர ரஜமகா விகாரைக்கு கையளித்தல் - கதிர்காமம் புண்ணிய பூமி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க ஓய்வு மண்டப கட்டடங்களை ஐந்து (05) வருட காலத்திற்கு பராமரித்து பேணும் பொருட்டு கிரிவெஹெர ரஜமகா விகாரைக்கு கையளித்து குறித்த காலப்பகுதி முடிவடைந்த பின்னர் இந்த ஓய்வு மண்டப கட்டடங்களை மீண்டும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. குறித்த ஓய்வு மண்டப கட்டடங்களை மீண்டும் கிரிவெஹெர ரஜமகா விகாரைக்கு பெற்றுத் தருமாறு கதிர்காமம் ரஜமாகா விகாராதிபதி தேரோ அவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க. இந்தக் கட்டடத்தின் பராமரிப்பு, திருத்த வேலைகள் மற்றும் உரிய ஒப்பந்த சேவைகள் சார்பிலான பட்டியல்கள் கிரிவெஹெர ரஜமகா விகாரையினால் தீர்ப்பதற்கு உட்பட்டு, புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் மீது ஐந்து (05) வருட காலத்திற்கு குறித்த ஓய்வு மண்டபத்தை கிரிவெஹெர ரஜமகா விகாரைக்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |