2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழுவைத் தாபித்தல் - நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படும் தாக்கங்களை குறைப்பதனை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் எய்தப்படும் நலன்களை உச்ச மட்டத்திற்கு கொண்டு வருதல் மற்றும் இந்த மறுசீரமைப்புகளின் மத்திய மற்றும் நீண்டகால நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு பொருளாதாரத்தின் சகல துறைகளினதும் உற்பத்தி திறனை விருத்தி செய்யவேண்டியுள்ளது. ஆயினும் உற்பத்தி திறன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் முறையாக செயலாற்றுவதற்கு சட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனமொன்று இந்நாட்டில் செயற்படவில்லை ஆதலால், உற்பத்தி திறன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் சாட்சி மற்றும் தரவுகள் மீது கொள்கை நியதிகளை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதற்கும் சுயாதீன நிறுவனமொன்றாக தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழுவைத் தாபிக்கும் தேவை இனங்காணப் பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழுவின் நிறுவன ரீதியிலான கட்டமைப்பினைத் தீர்மானித்தல், இந்த ஆணைக்குழுவைத் தாபிப்பதற்குத் தேவையான சட்டத்தை தயாரித்தல் மற்றும் இந்த ஆணைக்குழுவைத் தாபிப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய பிற விடயங்கள் என்பன தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |