2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் - தேசிய அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதென தீர்மானிக்கப் படும் இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளை செய்து கொண்டதன் பின்னர், உரிய தரப்பினர்களின் உடன்பாடின்றி குறித்த உடன்படிக்கைகளிலிருந்து விலக முடியாத விதத்திலான ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் விதிக்கப்பட வேண்டுமென 2023‑05‑22ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைவின் மீது சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |