2023-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கெரவலப்பிட்டிய மின்னறி துணை நிலையத்திலிருந்து நுகபே சந்தி வரை 33 கிலோவொட் இரட்டைச் சுற்று சீப்றா மின் கோபுரங்களின் மீது மின் கம்பி பாதையொன்றை நிர்மாணித்தல் - முத்துராஜவெல சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசத்தின் முதியன்சே கால்வாய் சார்ந்து கெரவலப்பிட்டிய மின்னறி துணை நிலையத்திலிருந்து நுகபே சந்தி வரை 33 கிலோவொட் இரட்டைச் சுற்று சீப்றா மின் கோபுரங்களின் மீது மின் கம்பி பாதையொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி பெற்ற நடவடிக்கையொன்றாக வௌிப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நடைமுறையிலுள்ள 2006‑10‑13 ஆம் திகதியிடப்பட்டதும் 1466/26 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தலொன்றை வௌியிடுவதற்கு சுற்றாடல் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு 2022‑12‑19ஆம் திகதியன்று அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மின்கம்பி பாதையை முதியான்சே கால்வாய் சார்ந்து நிர்மாணிப்பதற்கு பதிலாக முத்துராஜவெல சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசத்தின் எல்லையினூடாக நிர்மாணிப்பதற்குத் தேவையான அங்கீகாரத்தினை வழங்க முடியுமென மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உத்தேச மாற்று வழியினூடாக குறித்த மின் கம்பி பாதையினை நிர்மாணிப்பதற்கு அனுமதி பெற்ற நடவடிக்கையொன்றாக வௌிப்படுத்தி 2006‑10‑13 ஆம் திகதியிடப்பட்டதும் 1466/26 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வௌியிடுவதற்கு சுற்றாடல் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரானவருக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச் சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |