2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விவசாயிகளுக்கு சமனெலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்குதல் - உடவளவை நீர்தேக்கத்தின் கீழ் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பயிர்ச் செய்கைகளுக்கு போதுமான அளவு நீர் இல்லாததன் காரணமாக சமனெலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பு சம்பந்தமாக பின்பற்றக் கூடிய மாற்று வழிமுறைகள் பற்றி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த மாற்று வழிகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தற்போது சமனெலவெவ நீர்த்தேக்கத்தில் எஞ்சியுள்ள நீர் அளவிலிருந்து இயலுமான உச்ச அளவினை விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிப்பதற்கும் இதன் காரணமாக மின் உற்பத்தி தொடர்பில் எழும் பிரச்சனைக்கு தீர்வாக தேவையான மின்சாரத்தினை தனியார் துறையினரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |