• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களின் வைப்பு பணத்தின் மீதான வட்டி விகிதத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தை திருத்துதல்
- உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் சொந்தமான திறைசேரி பிணைமுறிகள் மறுசீரமைப்புக்கு உட்பட்டதன் மூலம் இந்த நிதியத்தின் அங்கத்தவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த கொடுப்பனவுகள் மற்றும் நலன்களை உறுதிசெய்யும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கடந்த ஐந்து (05) வருட காலத்தினுள் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டியின் விகிதாசாரத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2023-2026 காலப்பகுதி வரை எதிர்வரும் நான்கு (04) வருட காலத்தினுள் அங்கத்துவ பணத்தின் மீதான வட்டி விகிதம் ஆகக்குறைந்தது 9 சதவீதமாக விதித்துரைக்கும் வகையில் 1958 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.