• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார நெருக்கடியை முகாமிக்கும்போது பெற்றுக்கொண்ட வெற்றிகளும் தொலைநோக்கும்
- மாண்புமிகு சனாதிபதி அவர்கள் 2022 மே மாதம் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் நியமனம் பெற்ற சந்தப்பத்தில் நாடு முகங்கொடுத்திருந்த நெருக்கடியான நிலைமை தொடர்பாகவும், 2022‑07‑20 ஆம் திகதியன்றிலிருந்து சனாதிபதியாக பணிகளை ஆரம்பித்த பின்னர், புதிய அமைச்சரவையுடன் ஒன்றிணைந்து குறித்த நெருக்கடியினைத் தீர்த்து, நாட்டில் பொருளாதார நிலைப்படுத்தலுக்காக அரசாங்க நிதிக் கொள்கை, வலுசக்திப் பிரிவு, வெளிநாட்டு துறை, கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு நிதியிடல் போன்ற துறைகள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேபோன்று பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் மூலம் பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் பொருட்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.