• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான இலங்கையின் தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள்
- 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியில் திணைக்களமொன்றாக செயற்படும் நிதியியல் உளவறிதல் பிரிவானது வௌ்ளைப் பணமாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் ஆகிய சட்டங்களில் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ள ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றது. வௌ்ளைப் பணமாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் என்பவற்றை தடுப்பதற்காக சர்வதேச நியமங்களை தயாரிக்கும் சர்வதேச நிறுவனமான நிதி செயலாற்றுகை செயலணி சகல நாடுகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென 40 சிபாரிசுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க இலங்கை நிதி செயலாற்றுகை செயலணியின் சிபாரிசுகளுக்கு அமைவாக செயலாற்றுகின்றதா என்பது பற்றி நிதி செயலாற்றுகை செயலணியின் பிராந்திய நிறுவனமான வௌ்ளைப் பணமாக்கல் பற்றிய ஆசிய பசுபிக் குழுவினால் மதிப்பீடு செய்யப்படும். இந்தக் குழுவினால் செய்யப்படும் இலங்கையின் 3 ஆவது பரஸ்பர மதிப்பீடானது 2025 மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது .இதன் பொருட்டு சிறந்த முறையில் இலங்கையின் நிலைமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 2023-2028 காலப் பகுதிக்கான வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான இலங்கையின் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் வௌ்ளைப் பணமாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதலை தடுத்தல் சம்பந்தமாக இனங்காணப்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தீர்வுகளாக அந்தந்த நிறுவனங்களினால் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளை உள்ளடக்கி செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.