2023-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அஸ்வெசும சமூக நலன்புரி பிரதி இலாபங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - அஸ்வெசும சமூக நலன்புரி பிரதி இலாபங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் துரிதமாக பிரதி இலாபங்களைச் செலுத்துவதற்குரியதாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது:
* நலன்புரி பிரதி இலாபங்கள் சபையினால் அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப சுற்றில் 1,792,265 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுள் மேன்முறையீடுகள் அல்லது எதிர்ப்புகள் கிடைக்கப்பெறாத 1,588,835 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளைச் செய்தல். * பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு ஆயினும் மேற்குறிப்பிட்ட வகுதியில் சேர்வதற்கு மேன்முறையீடுகளை முன்வைத்துள்ள 84,374 பயனாளிகளுக்கு அவர்களுடைய மேன்முறையீடுகளை மீளாய்வு செய்து இறுதித் தீர்மானமொன்றினை வழங்கும் வரை அவர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள வகுதிக்குரிய பிரதி இலாபங்களைச் செலுத்துதல். * தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளிலிருந்து 119,056 பேர்களுக்கு எதிராக எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த எதிர்ப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் மீளாய்வுச் செயற்பாடு முடிவுறும் வரை அவர்களுக்குரிய பிரதி இலாபங்களைச் செலுத்துதல். * நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரதி இலாபங்களுக்காக விண்ணப்பித்திருந்தாலும் தெரிவு செய்யப்படாத தற்போது சமுர்த்தி பிரதி இலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் 393,094 பேர்களுக்கு அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் மீளாய்வு செய்யப்படும் செயற்பாடானது முழுமையாக முடிவுறும் வரை அவர்களுக்கு சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரதி இலாபங்களைச் செலுத்துதல். * தற்போது சிறுநீரக நோய்க்கான நிதியுதவி மற்றும் வலது குறைந்தோருக்கான நிதியுதவி பெறும் பயனாளிகளுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக தொடர்ந்தும் கொடுப்பனவுகளை செய்தல் அத்துடன் முதியோருக்கான நிதியுதவியினை அஞ்சல் அலுவலகங்களின் ஊடாக தொடர்ந்தும் வழங்குதல். * பராமரிப்பு இல்லங்களில் அல்லது மத வழிபாட்டுத் தலங்களிலுள்ள 11,660 சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள, வலது குறைந்த அல்லது முதியோர்களுக்கு உரிய பிரதி இலாபங்களை தொடர்ந்தும் செலுத்துதல். |