• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையில் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் பொருட்டு மூன்று (03) வருட காலத்திற்கு கைச்சாத்திடப்பட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலம் 2020‑02‑15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வௌிக் கொண்டுவரக்கூடிய ஆற்றல்களுள்ள விளையாட்டுத்துறைகளை இனங்கண்டு குறித்த துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களுக்கிடையில் தகவல்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் பரிமாறிக் கொள்தல் மற்றும் பரஸ்பர நன்மையின் அடிப்படையில் விளையாட்டுத்துறையின் இருதரப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு, இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை மேலும் மூன்று வருட காலத்திற்கு நீடித்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரைவு சார்பில் இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதோடு, அதற்காக சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.