2023-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக பாதுகாப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கியிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ளல் - வறுமை மற்றும் நலிந்தோருக்கு சிறந்த திட்டவட்டமான வருமான உதவியினையும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் சமூக பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்கு உலக வங்கியுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக 2023‑05‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நடாத்தப்பட்ட இணக்கப்பேச்சுக்களின் போது 'அஸ்வெசும' புதிய நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு 185 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் தெரிவுசெய்யப்படும் பயனாளிகளை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் பொருட்டு முன்னோடி கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் விதத்தில் 7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் மொத்த கருத்திட்டத்தின் முகாமைத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு முறைமையை பலப்படுத்துவதற்கு 8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் மூன்று (03) ஆக்கக்கூறுகளின் கீழ் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நிதியினை ஏற்பாடு செய்வதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. உரிய கடன் தொகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான சமவாயத்துடன் உரிய உடன்டிக்கையினைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |