2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த உறவினை பலப்படுத்தும் கருத்திட்டம் - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த உறவினை பலப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையின் கீழ் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் 2022‑03‑28 ஆம் திகதியன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது.. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் பௌத்த விகாரைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு சூரிய சக்தி மின்சார வசதிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு இரு தரப்பும் உடன்பாட்டிற்கு வந்துள்ளது. அதற்கிணங்க ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு உரிய திருத்தங்களைச் செய்து புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |