• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் மானிய உதவியின் கீழ் நிதியளிப்பதற்கு முன்மொழியப்பட்ட உணவு துறையில் சுழற்சிமுறை பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருத்திட்டம்
- இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திறமுறை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'இலங்கைக்கான பல்லாண்டு சுட்டெண் நிகழ்ச்சித்திட்டம் - 2021- 2027' என்பதன் மூலம் 2021-2024 காலப்பகுதியின் சார்பில் 60 மில்லியன் யூரோக்கள் கொண்ட கொடையொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொடையிலிருந்து 15 மில்லியன் யூரோக்களைப் பயன்படுத்தி 'உணவு துறையில் சுழற்சிமுறை பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருத்திட்டம்' என்னும் கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உணவு நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஆற்றலை விருத்தி செய்து உணவு துறையில் சுழற்சிமுறை பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உத்தேச கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இனங்காணப்பட்டுள்ளது. வினைத்திறன் மிக்க உணவு விநியோக வழிகள் / முறைகளை பயன்படுத்துவதற்கும், உணவு விரயத்தினை குறைப்பதன் மூலம் ஆபத்திற்கு ஆளாகக்கூடியவர்களுக்கு உணவு பாதுகாப்பினை விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தல், உணவு கழிவுகளை சேதனப் பசளை, விலங்கு உணவு போன்ற கமத்தொழில் தேவைகளாக மாற்றுதல் என்பன பொருட்டு கருத்திட்டத்தின் ஊடாக ஒத்துழைப்பு நல்கப்படும். அதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய உடன்படிக்கையினைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.