• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சடடத்தின் 10 ஆம் பிரிவுக்கு அமைவாக அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை நிதி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் ஒவ்வொரு நிதி ஆண்டும் யூன் மாத இறுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதோடு, அதன் பின்னர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கிணங்க, 2023‑06‑30 ஆம் திகதி வரையிலான அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் இணையத்தளத்தில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.