2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாலபே தகவல் தொழிநுட்ப பூங்காவில் அமைந்துள்ள காணியினை இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ஆய்வுகூட நிர்மாணிப்புக்காக வழங்குதல் - இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ஆய்வுகூடத்தை நிர்மாணிப்பதற்காக மாலபே தகவல் தொழிநுட்ப பூங்காவில் அமைந்துள்ள 3 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித் துண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் காணித் துண்டை சுவீகரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செலவு செய்யப்பட்டுள்ள தொகையானது ஏற்கனவே இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறித்த காணித் துண்டை இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு இறையிலி உறுதியின் மூலம் உடமை மாற்றுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |