• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜினரத்தன கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபைக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ள கொழும்பு 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள காணியை கொடையொன்றாக வழங்குதல்
- பேரே நீர் ஏரி புனரமைப்பு கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது ஶ்ரீ ஜினரத்தன கல்வி நிறுவனத்தினால் பயன்படுத்திவந்த காணிக்குப் பதிலாக கொழும்பு 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள 45 பேர்ச்சஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டை வருடாந்த குத்தகை அடிப்டையில் 99 வருட காலப்பகுதிக்கு கல்வி நோக்கம் கருதி இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. வினைத்திறன்மிக்க கல்விச் சேவையினை வழங்குதல் மற்றும் இந்த நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதிக வசதிகளை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் குறித்த காணியை அபிவிருத்தி செய்வதற்காக நீண்டகால குத்தகைக்குப் பதிலாக இந்த காணியை கொடையொன்றாக வழங்குமாறு ஶ்ரீ ஜினரத்தன கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபையின் போசகராகவுள்ள தேரோ அவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு 2023‑04‑06 ஆம் திகதியன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஶ்ரீ ஜினரத்தன கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபைக்கு கொடையொன்றாக வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.