• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய குடியரசுக்கும் இலங்கை குடியரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறையில் ஒத்துழைப்பிற்கான கூட்டு அபிப்பிராய வௌிப்படுத்துதலில் கைச்சாத்திடுதல்
- இலங்கையில் பால் உற்பத்தியின் தரத்தை விருத்தி செய்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறிய அளவிலான பால் பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற குறியிலக்குகளை அடைவதற்காக இணைந்து செயலாற்றும் பொருட்டு இந்திய குடியரசுக்கும் இலங்கை குடியரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறையில் ஒத்துழைப்பிற்கான கூட்டு அபிப்பிராய வௌிப்படுத்தலை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன் பொருட்டு வரையப்பட்டுள்ள கூட்டு அபிப்பிராய வௌிப்படுத்தலுக்கு சட்ட மா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, குறித்த அபிப்பிராய வௌிப்படுத்தலை கைச்சாத்திடும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.