2023-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) (205 ஆம் பிரிவு) - குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2022‑10‑10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் குடியியல் சட்ட மறுசீரமைப்பு உபகுழுவினால் குறித்த இந்த சட்டமூலத்திற்கு செய்யவேண்டிய மேலும் சில திருத்தங்களை இனங்கண்டுள்ளது. இந்த திருத்தங்களையும் உள்ளடக்கி, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |