2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சூதாட்ட ஒழுங்குறுத்தல் அதிகாரசபையைத் தாபித்தல் - சூதாட்டம் மூலம் எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தை முறையாக அறவிடுதல், சூதாட்ட செயற்பாடுகள் சம்பந்தமான குற்றவியல் செயற்பாடுகளை தடுத்தல், சூதாட்டத்தின் மூலம் ஆட்களுக்கும் சமூகத்திற்கும் நிகழும் பிரதிகூலமான தாக்கங்களை குறைத்தல் போன்ற நோக்கங்கள் கருதி சூதாட்ட செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அமுலுக்குவரும் விதத்தில் சூதாட்ட ஒழுங்குறுத்தல் அதிகாரசபையைத் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சூதாட்ட ஒழுங்குறுத்தல் அதிகாரசபையைத் தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |