• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை
- இலங்கை மத்திய வங்கியின் சிபாரிசின் மீது சில மூலதன கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நடப்பு பரிமாற்றங்கள் தொடர்பான சில வௌிப்புற பணப்பரிமாற்றங்கள் 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு / மட்டுப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் காலத்திற்கு காலம் கட்டளைகள் வௌிப்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இறுதியாக 2022‑12‑22 ஆம் திகதியன்று வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளையின் செல்லுபடியாகும் காலம் 2023‑06‑30 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் சிபாரிசுக்கு அமைவாக குறித்த கட்டளைகளை மேலும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டளையொன்றை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்தக் கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.