2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல் - ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் தற்போது செயற்படும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆற்றல் போதுமானதாக இல்லாததன் காரணமாக கழிவு நீர் அண்மையிலுள்ள வீதிகளுக்கு விடுவிக்கப்படுவதனால் பொது மக்கள் பாதிக்கும் விடயமொன்றாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்வதன் கீழ் நாளொன்றில் 2,000 கனமீற்றர் ஆற்றல் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணிப்பினை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி அதிகார சபையினால் இலங்கை முதலீட்டு சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் நிதியினைப் பயன்படுத்தி இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதன் பணிப்பாளர் சபையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை முதலீட்டு சபையின் நிதியிலிருந்து 1,110 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்யும் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |