2023-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொலை உணர்வு தொடர்பான 45 ஆவது ஆசிய மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல் – தேசிய அபிவிருத்தி பணிகளின் போது தொலை உணர்வு தொழிநுட்பத்தின் முக்கியத்துவத்தினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஆசிய – பசுபிக் வலய நாடுகளினால் தொலை உணர்வு தொடர்பான ஆசிய அமைப்பானது தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையும் ஆரம்ப உறுப்பினராகவுள்ள இந்த அமைப்பின் உறுப்பு குழுக்கள் பல அதாவது பொது உறுப்பினர்கள், துணை உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தொலை உணர்வு தொடர்பான 45 ஆவது ஆசிய மாநாட்டினை 2024 ஒக்றோபர் - நவெம்பர் காலப்பகுதியில் ஐந்து (05) நாட்கள் கொழும்பில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த மாநாட்டினை இலங்கையில் நடாத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |