2023-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதார துறையில் ஒத்துழைப்பு துறையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் – சுகாதார சேவைகளை விருத்தி செய்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் இருநாட்டு மக்களினதும் சகவாழ்வை விருத்தி செய்தல் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் சுகாதார துறையின் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் நோக்கில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதார துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உத்தேச வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |