2023-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை – சுங்க பணிகளுக்குரியதாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிகளை பலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு உட்பட தொடர்பாடலை பலப்படுத்துதல் என்பவற்றை நோக்காகக் கொண்டு இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டு வரையப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |