2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் மேல் பிராந்திய மாநகர பிரதான திட்டம் 2048ஐ நடைமுறைப்படுத்துதல் – நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 2015 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மேல் பிராந்திய மாநகர பிரதான திட்டத்தை மீளாய்வு செய்வதற்கு சிங்கபூர் M/s Surbana Jurong (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு 2023‑05‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆரம்ப பிரதான திட்டத்தின் கீழ் இதுவரை இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த திட்டத்தை மீளாய்வு செய்து, 'மேல் பிராந்திய மாநகர பிரதான திட்டம் 2048' தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் வசதிகளை ஒருங்கிணைப்பதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |