• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"புதிய எல்லைகளுக்கான முயற்சி" முதலாவது சர்வதேச சுரங்க மற்றும் கனிய மாநாடு, முதலீட்டாளர் மன்றம் மற்றும் கண்காட்சி
- இலங்கையில் தற்போது மற்றும் எதிர்கால கனிய கைத்தொழிலில் ஈடுபடும் சகல பங்குதாரர்களுக்கும் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் "புதிய எல்லைகளுக்கான முயற்சி" என்னும் பெயரில் சர்வதேச சுரங்க மற்றும் கனிய மாநாடு, முதலீட்டாளர் மன்றம் மற்றும் கண்காட்சியை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை கனிய கைத்தொழிலுக்கு உலகளாவிய ரீதியில் வர்த்தக பெயருடனான பெறுமதியினை கட்டியெழுப்புதல் மற்றும் பாரிய அளவிலான முதலீடுகள் உட்பட பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, சர்வதேச சுரங்க மற்றும் கனிய மாநாடு, முதலீட்டாளர் மன்றம் மற்றும் கண்காட்சியை 2023 ஒக்றோபர் மாத்தில் நடாத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.