2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கப்பல் தொழிற்துறை உட்பட வழங்கல் சேவைகளின் அபிவிருத்தியின் பொருட்டு கொள்கை கட்டமைப்பொன்றைத் தயாரித்தல் - கப்பல் தொழிற்துறை உட்பட வழங்கல் சேவை தொழிலின் போட்டி எந்தவொரு நாட்டினதும் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய காரணியாகும் என்பதோடு, சிங்கபூர் மற்றும் கொங்கொங் போன்ற நாடுகள் பெற்றுள்ள அனுபவம் இலங்கை போன்ற தீவு சார்ந்த பொருளாதாரத்திற்கு மிக ஏற்றதாகும் . ஆயினும் இலங்கையில் கப்பல் தொழிற்துறை உட்பட வழங்கல் சேவை தொழிலுக் குரியதாக நடைமுறையிலுள்ள கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை கட்டமைப்பு பெரும்பாலும் பாதுகாப்பானதாகும் என்பதோடு, இது தொழிலின் அபிவிருத்தியின்பால் முதலீடுகளை ஈற்பதற்கோ அல்லது போட்டி / செலவு பயன் வழங்கல் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு இவ்வாறு சேவை வழங்குவதற்கு சார்பு நிலைமையினை உருவாக்குவதற்கோ போதுமானதாக இல்லையென்து தெரியவந்துள்ளது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வழங்கல் சேவை தொழில் தொடர்பில் கொள்கை கட்டமைப்பொன்றைத் தயாரிக்கும் தேவை 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கப்பல் தொழிற்துறை உட்பட வழங்கல் சேவைளுக்குரியதாக கொள்கை மற்றும் ஒழுங்குவிதிகளை ஆராய்ந்து சர்வதேச தேவைகளுக்கு அமைவாக 2023 – 2027 காலப்பகுதியைத் தழுவும் விதத்தில் வழங்கல் சேவை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு திறைசேரி செயலாளரின் தலைமையில் ஏனைய உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கொள்கை குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |