• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை முறி கட்டமைப்பு
– பசுமை நிதியிடலின் பொருட்டு ஈடுபடுவதற்கு அரசாங்கத்தின் எதிர்பார்ப்பானது 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வௌிப்படுத்தப்பட்டது. இத்தகைய முறி வழங்கள் மூலம் கிடைக்கப்பெறும் நிதியினை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, வலுசக்தி வினைத்திறன், பசுமை கட்டிடங்கள், சுத்தமான போக்குவரத்து, நிலையான நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம், சுற்றாடல் மாசடைதலைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், சுழற்சி பொருளாதார நடவடிக்கைகள், காலநிலை மாற்றங்களுக்கு அமைவாக செயற்படுதல், உயிரின பல்வகைமையை பாதுகாத்தல், இயற்கை வளங்கள் மற்றும் காணி பயன்பாட்டின் நிலைபேறுடைய முகாமைத்துவம் போன்ற பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியம் நிலவுகின்றது. பசுமை / நீல மற்றும் நிலையான நிதி காரணிகளின் மூலம் நிதியிடலின் பொருட்டு அணுகுவதற்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பொன்றைத் தாபிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்தாசை நல்குவதற்கு ஆசிய மற்றும் பசுபிக் வலையத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக ஆணைக்குழு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உலகளாவிய பசுமை அபிவிருத்தி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, தற்போது பசுமை முறி கட்டமைப்பொன்று வரையப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் வலையத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக ஆணைக்குழுவினது உலகளாவிய பசுமை அபிவிருத்தி நிறுவனத்தினதும் ஒத்துழைப்புடன் வரையப்பட்டுள்ள பசுமை முறி கட்டமைப்பை செல்லுபடியாகும் ஆவணமொன்றாக மாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இரண்டாம் தரப்பு கருத்தினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.