2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய அபிவிருத்தி கருத்திட்டங்களின் / நிகழ்ச்சித்திட்டங்களின் முறைசார் மதிப்பீட்டின் பொருட்டு தேசிய அபிவிருத்தி குழுவொன்றைத் தாபித்தல் – உரிய முறையில் இனங்காணப்படாமலும் முறையான மதிப்பீடு இன்றியும் அபிவிருத்தி கருத்திட்டங்களை / நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதன் விளைவாக கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில கருத்திட்டங் களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றினை அடைவதற்கு முடியாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது. ஆதலால், அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி கருத்திட்டங்களை / நிகழ்ச்சித்திட்டங்களை மதிப்பிடும் செயற்பாட்டிற்கு தேசிய அபிவிருத்தி குழுவொன்றைத் தாபிப்பது தொடர்பிலான பிரேரிப்பானது 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது நிதி என்னும் விடத்திற்கு பொறுப்பான அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் கொள்வனவுக் குழுவினால் பரிசீலனைச் செய்யப்படும் மதிப்பிடப்பட்ட செலவு அல்லது அதற்கு கூடுதலான மதிப்பீட்டு செலவுடன்கூடிய கருத்திட்டங்கள் / நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலான அதன் சிபாரிசுகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக முன்னாள் திறைசேரியின் பிரதி செயலாளரான திரு.தயா லியனகே ஆவர்களின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |