2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மக்கள் சீன குடியரசின் யுனான் மாகாண மக்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அலுவலகத்திற்கும் இலங்கை வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல் - 2023 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதிவரை மக்கள் சீன குடியரசின் யுனான் மாகாணத்தின் ஆளுநர் வன் சுபோ அவர்களின் இலங்கை விஜயத்தின்போது மக்கள் சீன குடியரசின் யுனான் மாகாண மக்கள் அரசாங்கத்தின் வெளிநாடடு விவகாரங்களுக்கான அலுவலகத்திற்கும் இலங்கை வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையின் மூலம் பரஸ்பர சுற்றுலா, பொருளாதார, விற்பனை, வர்த்தக, கல்வி, சுற்றுலா, கமத்தொழில், மனிதவள மற்றும் கலாசார பரிமாறல், மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் சார்பில் இலங்கைக்கு ஒத்தாசை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |